திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாலொன்று புதன் கிழமை (4) கந்தளாய் பேராறு பகுதியில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
ஐனாதிபதி தேர்தலின் பிற்பாடு எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது தொடர்பாக கந்தளாயின் கட்சி முக்கியஸ்தகர்களுக்கிடையில் கருத்துகளும் பரிமாறப்பட்டன.
இதன் போது பாராளுமன்ற இம்ரான் மஹ்ரூப் உறுப்பினர் பேசும் போது :
இம்மாவட்டத்தின் எனது தந்தை அமைச்சராக இருக்கும் போது பல்வேறு முன்னுதாரன செயற்பாடுகளையும்,அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளார்.
அவரின் விட்டுச் சென்ற பணிகளை முடிவுறுத்தி வந்து இறுதிக் கட்டத்தில் உள்ளேன்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் திருகோணமலை தொகுதிகள் கடத்த பத்து வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக காணப்பட்டது.
தற்போதும் இருக்கின்றது கட்சியை புனரமைப்புதுப் பொழியுடன் சென்றால் மக்கள் பிரதி நிதிகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற பிரதி நிதிகளையாவது ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
