இதன் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி சத்தியத்திற்க்கும் அசத்தியத்திற்று க்குமான வெற்றியாகும்.இவரின் வெற்றி மகத்தான வெற்றியாகும்.
தமிழ்,முஸ்லிம் தலைவர்கள் மக்களை பிழையாக வழி நடாத்தி ஏமாற்றுகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏஜெண்டாக மாறி மக்களை பிழையாக வழி நடாத்து கிறார். இது ஒரு பிழையான நடைமுறையாகும். இவ்வாறு நடக்க வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் .
முஸ்லிம் மக்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் கட்சி தலைவர்கள்கட்சியையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் ஆனால் அவர்கள் தங்களையே பாதுகாத்து கொள்கின்றனர்.
மேலும் குறிப்பாக கடந்த 2010 மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம் ஆசிரியர் 150 நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசில் சமய பாட ஆசிரியர் நியமனம் வழங்க வர்த்தமானி வெளியிட்டும் பெற்று கொடுக்க வில்லை .நாட்டில் உள்ள அனைத்து உலமாக்களையும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் .இதன் மூலம் எமது உரிமைகள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் கோட்டாபய ராஜபக்ஷ தூர நோக்குள்ள தலைவர் .இதில் மக்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.