அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைத்த கட்சிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்தவகையில் குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சர்கள் பலர் இன்று தமது அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்வார்கள் என்றும் பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் இன்று இடம்பெரும் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ஒருவர் பதவி விலக வேண்டும் என்றால், அவர் தானாக இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -