வேலுகுமாரின் கோரிக்கையை ஏற்றார் சஜித்


ண்டி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கான விசேட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் எம்.பியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதன்ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக சகல வசதிகளையும்கொண்ட தமிழ் தேசிய பாடசாலையொன்று கண்டி மண்ணிலே உதயமாகும் என்று வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (02.11.2019) கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரான அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியதாவது,

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக இக்கூட்டத்தை ஏற்பாடுசெய்த எமது கட்சியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், வரலாற்று வெற்றியை பதிவுசெய்வதற்காக இன்னும் நாம் உத்வேகத்துடன் களப்பணியாற்ற முன்வரவேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன்.
கண்டி மாவட்டத்தில் நிலவும் – இதுவரையில் தீர்வுகாணப்படாமல் இழுபறி நிலையிலுள்ள பிரச்சினைகளுக்கு நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் துரித கதியில் தீர்வுகள் முன்வைக்கப்படும் என எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக வீடமைப்பு திட்டம் சார் பிரச்சினைகள் முன்னுரிமை வழங்கி தீர்த்து வைப்பதற்கு அவர் எதிர்பார்க்கின்றார். அந்தகையில் மஹியாவ மக்களுக்கான வீடமைப்பு திட்டம். நித்தவல மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஆகியன உரியவகையில் நிறைவேற்றப்படும் என்பதுடன், தோட்டப்பகுதிகள்மீது விசேட கவனம் செலுத்தப்படும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்ட பல விடயங்களை தனது தேர்தல் அறிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்.
இதன்படி தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். குறுகிய மற்றும் நீண்டகாலத்தின் அடிப்படையில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, தொழிலாளர்கள் சொந்தகாலில் நிற்கும்நிலை உருவாகும்வரை அவர்களுக்கு நாளாந்த வருமானமாக 1500 ரூபா கிடைப்பதை உறுதிப்படுத்துவேன் என்றும் எமது ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்துள்ளார்.
நல்லாட்சியின்கீழ் எமது மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வென்றெடுத்துள்ளோம். உரிமைசார் விடயங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதே வேகத்தில் முன்நோக்கி பயணித்து சமூகமாற்றம் என்ற நிலையை அடையவேண்டுமானால் எமக்கு இந்த ஆட்சி தொடரவேண்டும். அதற்காக சஜித்தை நிச்சயம் ஜனாதிபதியாக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எங்கள் அன்னமே வெற்றிநடை போட்டது. 88 ஆயிரத்து 409 மேலதிக வாக்குகளால் மஹிந்தவை மண்கவ்வ வைத்தோம். இம்முறை சஜித் வெற்றிநடைபோடுவார். வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது எம் பணியாகும்.” என்றார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -