பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு கிழக்கு அபிவிருத்திக்காக மந்திரி பதவி!!


பாறுக் ஷிஹான்-
ராஜபக்ச குடும்பத்தினர் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு கிழக்கு அபிவிருத்திக்காக மந்திரி பதவி கொடுப்பார்கள் என நம்புவதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் அம்பாறை கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் பொறுப்பாளரும் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவருமாகிய கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கைத்தீவின் 7 வது நிறைவேற்று சனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வினையும் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டும் கல்முனை நகரின் பிரதான வீதியால் செல்வோருக்கு சாக சாந்திகள் மற்றும் இனிப்பு பண்டங்களை ஐக்கிய தமிழர் முற்போக்கு கூட்டணியின் கல்முனை பிராந்திய அமைப்பாளர்களால் வழங்கி வைக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கிழக்கின் அபிவிருத்தியில் எதிர்காலத்தில் எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பாரிய பங்காற்றுவார் .எதிர்காலத்தில் கிழக்கில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம்.நேற்று நள்ளிரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டின் மீது என் தலைமையில் குழு ஒன்று சென்று வாள்களை காட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக செய்தி ஒன்று பரப்பப்படுகிறது.இதை முற்றாக நான் மறுக்கின்றேன்.ஜனநாயக ரீதியாக எனது செயற்பாடுகளை முன்னெடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை நிச்சயித்துள்ளோம்.இதை தாங்கி கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -