இன்றைய International Chamber of Commerce கலந்துரையாடலில் சஜித் குறிப்பிட்டவை
வை எல் எஸ் ஹமீட்-
தேசியப்பாதுகாப்பு என்பது
1. ஆயுதப் படைகளினூடான பாதுகாப்பு
2. சமூக, பொருளாதார ரீதியான பாதுகாப்பு: இங்கு 1971 ம் ஆண்டைய கிளர்ச்சி தொடர்பாக குறிப்பிட்டு இளைஞர்களின் தொழிலின்மை, பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு அவைகளுக்குத் தீர்வுகாண்பதும் அவசியமென குறிப்பிட்டார்.
3. அரசியல் பாதுகாப்பு
இம்மூன்றையும் குறிப்பிட்டு இவை அனைத்தும் ஒருங்கு சேர்ந்துதான் “தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்; எனக் குறிப்பிட்டார்.
இங்கு என்னைக் கவர்ந்ததும் இந்தப் பதிவைத் தூண்டியதும் இந்த “ அரசியல் பாதுகாப்பு” என்பதற்கு அவர் கொடுத்த விளக்கமாகும்.
அதாவது, கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் மதத்தீவிரவாதத்தை வளர்த்தார்கள். மதஸ்தலங்லகள் தாக்கப்பட்டன...., என்று அதைப்பற்றி விபரித்தார்.
இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதும் என்னை மிகவும் கவர்ந்த அம்சமும் எதுவென்றால்;
அவர் ‘தீவிரவாதம்’ என்ற ஒரு சொல்லை எடுத்து தீவிரவாதத்தை ஆயுதப்படை, பொலிஸ், உளவுத்துறை மூலம் கண்டறிந்து கட்டுப்படுத்துவதைப்பற்றி பேசவில்லை.
அடுத்த தரப்பு வேட்பாளர், சகல மேடைகளிலும் ‘அடிப்படைவாதம், தீவிரவாதம்’ என்ற பதங்களை உச்சரித்து அதனை தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி அவற்றை ஒழிப்பதன்மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைப்பற்றி பேசுகின்றார்.
அதாவது ‘அடிப்படைவாதம், தீவிரவாத வாதம்’ என்பன தனியான அம்சங்கள். They have a separate independent existence. அவற்றிற்குரிய தீர்வு பாதுகாப்புத் தரப்பினரிடம் மாத்திரமே இருக்கிறது. யுத்தத்தை வெற்றிகொண்ட அனுபவம், தான் அதனை வெற்றிகரமாக செய்ய உதவும். இதுதான் அவர்களின் பிரச்சாரமாகும்.
இந்த அடிப்படைவாதம், தீவிரவாதம் எங்கிருந்து புறப்படுகின்றன? எனில் சிறுபான்மைகளிடமிருந்தாகும். குறிப்பாக முஸ்லிம்களிடமிருந்தாகும். இது அவர்களுடைய நிலைப்பாடு. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவர்களுடைய, அவர்களுடன் இருக்கின்ற இனவாதிகளினுடைய பிரச்சாரங்கள் இருக்கின்றன.
மறுபுறம், ‘ அடிப்படைவாதம், தீவிரவாதம்’ என்பவற்றிற்கு தனியான இருப்பைக் கொடுக்காமல் அவற்றை ‘ அரசியல் பாதுகாப்பு’ என்ற ஓர் அம்சத்திற்குள் உள்வாங்குகிறார், சஜித்.
தங்களது அரசியலை பாதுகாக்க, அதனைத் தொடர்ந்து தக்கவைக்க சில அதிகார அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் உருவாக்கப்படுவதுதான் ‘ தீவிரவாதம்’ என்கின்றார்; சஜித். அதற்கு ஓர் உதாரணமாகவே, வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவதை குறிப்பிடுகின்றார்.
அதாவது. அடிப்படை வாதம், தீவிரவாதம் has no existence of its own. அவைகள் அதிகார கதிரையில் தொடர்ந்து இருக்க முடியாமல்போகுமோ என்று அஞ்சுகின்றவர்கள் தங்கள் அரசியலைப் பாதுகாத்துக்கொள்ள செயற்கையாக உருவாக்கும் அரசியல் உற்பத்திகளாகும்.They are offsprings of feelings of political insecurity of section of politicians wanting to cling on to power forever.
எவ்வளவு பாரிய வித்தியாசம்.
ஒரு தரப்பு, அடிப்படை வாதம், தீவிரவாதம், எனக்கூறிக்கொண்டு முஸ்லிம்களைப் பிரதானமாக குறிவைக்க, அடுத்த தரப்பு அவை அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் ‘அரசியல் குழந்தை’ என வர்ணிக்கின்றது. முதலில் அதற்கு தீர்வு காணாமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது; என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதே கருத்தை அவர் வேட்பாளராகி ஒரு சில தினங்களில் நடைபெற்ற இதேவிதமான ஒரு கலந்துரையாடலிலும் குறிப்பிட்டிருந்தார். அதன்மூலம் இது அவருடைய தெளிவான நிலைப்பாடு என்பது நிரூபணமாகிறது.
சிந்திக்க முடிந்தவர்களுக்கு இந்த ஒரு விடயம் போதும் சரியான முடிவு எடுக்க. நாம் எடுக்க வேண்டிய தீர்மானத்தின் அடிப்படை அம்சமே இங்குதான் இருக்கிறது. இதுதான் நமது பாதுகாப்பின் பிரதான அம்சம்.
நமக்கு ராணுவமும் பொலிசும் எக்காலமும் பாதுகாப்பு தரமுடியாது. அரசியலால் உருவாக்கப்படுகின்ற இனவாதம் என்று களையப்படுகின்றதோ அன்றுதான் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் இன்ஷாஅல்லாஹ்.