கலாபூஷசணம் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் நடாத்தும் மீலாத் கவியரங்கம்


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில்
லாபூஷணம் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் நடாத்தும் மீலாத் கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் எதிர்வரும் பத்தாம் திகதி மீலாத் தினத்தன்று பிற்பகல் 1.05 க்கு ஒலிபரப்பாக உள்ளது.
“பண்புகளில் மாண்பு நம் பயகம்பர் நபி வாழ்வு” எனும் தலைப்பில் இடம்பெறும் இக்கவியரங்கில் ஹுனுபிட்டிய, கமர்ஜான் பீபி “தாய்மார்களின் தந்தை” எனும் தலைப்பிலும், முல்லைத் தீவு ஜெம்ஸித் அஸீஸ் “வழங்கலில் வள்ளல்” எனும் தலைப்பிலும், பொலொன்னறுவ, இராணி பெளஸியா “பொறுமையின் பெருமை” எனும் தலைப்பிலும், வெலிகம, ‘கலைமகன்’ இஸ்மாயில் எம் ஃபைரூஸ் “தலைவர்களின் தலைமகன்” எனும் தலைப்பிலும் கவிதைகள் பாடுகின்றனர்.
இம்மீலாத் கவியரங்கில் கவிபாடும் ஐவரும் வட, மத்திய, வடமத்திய, தென், மேல், எனும் ஐந்து மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், கவியரங்கை நடாத்துபவரைத் தவிர ஏனைய நால்வரும் முஸ்லிம் சேவை கவியரங்கத்துக்கு புதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -