இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகள் பெண்களுக்கான சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. பெண்களின் மாதவிடாய் கால நேரத்தில் பெண்கள் உரிய சுகாதார முறையை கையாளாமல் இருப்பதால் அவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முன் கொடுக்கின்றார்கள்.
இலங்கையிலுள்ள 4.2 மில்லியன் பெண்களில் 30 வீதமானோர் மட்டுமே சுகாதார அடிப்படையான சனிடேஷன் பேடை Menstrual காலத்தில் இதுவரை பாவித்து வருகின்றார்கள்.
ஒரு நபருக்கான, ஒரு வருடத்திற்கு இதற்கான செலவு ஒரு சராசரி குடும்பத்தில் இருமாத அரிசியை கொள்வனவு செய்வதற்கான செலவிற்கு ஒத்ததாகும். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கும் சமயத்தில் இன்னும் பல மடங்காக மாறுகிறது.
இதற்கு அப்பால் மிக முக்கியமான விடயமாக, சுகாதாரமற்ற பாவனையால் பெண்கள் பல நோய்களால் ஆட் கொள்ளப்படுகிறார்கள். சிறுநீர் தொற்று நோய்கள், கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோய்கள்(Cervical Cancer) நிரந்தர சிறுநீரக பாதிப்புகள், இலங்கையில் மட்டும் ஒரு வருடத்திற்கு 1750க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 650 மேற்பட்டோர் மரணமடைகிறார்கள்.
மற்றும் சுகாதாரமற்ற சனிடேஷன் பேட் பாவனையானது பெண்களின் கல்வி நிலை நிலைமையிலும் ஊழியர் வலுவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
23 வீதம் தொடக்கம் 40 வீதம் வரை மாணவர்கள் இதனடிப்படையில் 1.3 மில்லியன் பாடசாலை நாட்களை தவறிவிடுகிறார்கள். இது பெண்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
சஜித் பிரேமதாச அவர்களின் அவர்களினால் முன்மொழியப்பட்ட பெண்களின் menstrual சம்பந்தமான சுகாதாரத்தோடு கூடிய தீர்வை பெற்றுக் கொள்வது சம்பந்தமான அவரது கரிசனை பாராட்டத்தக்கது. நகர்ப்புறங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைக்கொண்ட குடும்பத்தினருக்கும், கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் அவர்களின் கரிசனையின் பெறுமதியை புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வெறுமனே கொமிசன்களுக்காக மெழுகுபுசப்பட்ட காபட் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு, அடிமட்ட மக்களின் சுகாதார பிரச்சினைகள் கேலிக்கையாகத் தான் தெரியும்.