இன்று இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பு விழா !


லங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு அனுராதபுரம் றுவன்வெலிசாயவில் அவர் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்களென பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -