மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோவும் 150 கிராம் கஞ்சவை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோவும் 150 கிராம் கஞ்சவை கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்றிரவு(17) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வவுனியாவிலிருந்து கந்தளாய் பகுதியிக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோவும் 150 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற போதே மொறவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஹேரொயின் வழக்கொன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாகவும்,சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு,
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தஉள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -