கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவிப்பு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியிருந்தார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விஜயதாஸ ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இதன்காரணமாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -