பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஐ. ஏ. காதிர் கான்-

னாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாவட்ட மட்டத்தில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அரச அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இம்முறை 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என்றும்,
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 92 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -