மக்கள் சகவாழ்வு மன்ற தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.நவாசுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான விருது.

எச்.எம்.எம்.பர்ஸான்-

நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வேண்டி செயற்படுகின்ற கலைஞர்கள், நல்லிணக்கம் தொடர்பாக செயற்படுபவர்கள் போன்றோரை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மனித உரிமைகள் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்களைச்சேர்ந்த சமூக நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மக்கள் சகவாழ்வு மன்றத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களுக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -