கோத்தாவை ஏன் புறக்கணிக்க வேண்டும்...!!!


வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை-

திர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடை பெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்தைந்து வேற்பாளர்கள் வெவ்வேறு கட்சியை மையப்படுத்தி பொது வேற்பாளாராகவும், சுயேற்சையாகவும் களமிறங்கியுள்ளார்கள்.
இவர்களில் இரண்டு கட்சிசார் வேற்பாளர்களுக்கே பலத்த போட்டி நிலவும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது. இதில் புதிய ஜனநாயக முன்னனியின வேற்பாளர் சஜித் பிரமதாச மற்றும் பொதுஜனபெரமுனவின் வேற்பாளர் கோத்தபய ராஜபக்ச இவர்கள் இருவரில் முஸ்லிம் சமூகம் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இங்கு தொங்கி நிற்கின்றது.
முஸ்லிம்களை மையப்படுத்தி அரசியல் செய்கின்ற இரு பெரும் முஸ்லிம் கட்சிகள் சஜித்துக்கு ஆதரவு வேண்டி பிரச்சாரம் செய்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள்,அபிமானிகள் அனைவரும் அக்கட்சியின் வேதவாக்குப்படி புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரமதாசாவுக்கே வாக்களிக்க தயாராக இருந்தாலும் நடுநிலையாக சிந்திக்ககூடிய பெரும்பாலான பாமர மக்கள் முதல் கொண்டு,படித்தவர்கள் வரை கட்சி அரசியலுக்கப்பால் ஜனாதிபதி வேற்பாளராக சஜித்தை முன் மொழிந்தபோதே இவருக்கே எமது வாக்கு என்று தீர்மானித்து விட்டார்கள்.
கடந்த நான்கரை வருட ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் எண்ணிலடங்கா அநீதி இழைக்கப்பட்டுள்ள போது எதற்கு நாம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை மீண்டும் ஏன் முஸ்லிம் சமூகம் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எம்மிடத்தில் எழுந்து நிற்கின்றது..?

நாட்டில் சுமார் முப்பது வருடங்கள் தலைவிரித்தாடிய விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துக்கு கடந்த கால மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், இலங்கை இராணுவம் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் போர் செய்கின்றோம் என்ற போர்வையில் சர்வதேச போர் விதி முறைகளை மீறி இரசாயண ஆயுதங்களை இறுதி ஈழப்போரில் மேற்கொண்டு தாக்குதல்களில் உபயோகித்ததாகவும், இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என பலர் கொல்லப்பட்டதாகவும் பாரிய குற்றச் சாட்டொன்று இருந்து வருகின்றது.
அதே நேரம், இந்த யுத்தத்தை முன்னின்று நடாத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கெதிராகவும்,அவரின் சகோதரர் தற்போதய பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கெதிராகவும பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேச நாடுகள் தொட்டு ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்டது.

இருந்தாலும் மஹிந்த ராஜபக்சவின் இறுகிய உடல்கட்டமைப்புக்கேற்ப அவரின் மனோநிலையும் அவ்வாறே இருந்ததால் அவர் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அவரது சகாக்களின் மனோ இச்சைப்படியே யுத்தம் நிறைவுற்ற பிறகும் முஸ்லிம்,சிங்களம் என்ற ஒரு பேரினவாத்தை அவரின் சகோதரர் தற்போதய ஜனாதிபதி வேற்பாளர் கோத்தபய ராஜகபக்சவின் முஸ்தீபுகள் கொண்டு வந்தார்.
கடந்த கால மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இனவாதக் குழுக்களினால் பல்வேறு இன்னல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டு தங்களது மார்க்க விழுமியங்களை பின்பற்றுவதில் பல இடையூறுகளையும் சந்தித்து வந்தததையும் இன்று வரை அது பல்வேறு கோணங்களில் தொடர்வதையும் தற்போது தேர்தல் காலம் என்பதால் இனவாதிகள் சற்று
ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையும் நாம் ஒன்றும் அறியாமலில்லை.

அதற்கப்பால் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த முடிவாக இருந்ததன் விளைவாகவும், ஏற்கனவே தமிழ் மக்களும் அவ்வரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டதன் விளைவாகவும் பெரும்பான்மை மக்களின் ஆதாரவோடும் மஹிந்த அணியினர் ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
பின்பு தொட்டு ஆரம்பித்த மைத்திரி பால சிரி சேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலாவது முஸ்லிம்கள் நிம்மதியாக தங்களது வணக்க வழிபாடுகளையும், பொருளாதாரத்தையும் பேணி பாதுகாக்கலாம் என்றிருந்த நிலையில்,
அந்நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்புக் கொடுத்துள்ளதா என்றால் அதுவும் கேள்விக்குறியான விடயமாகவே இருந்தது அதற்கு முக்கிய காரணம் கூட்டாட்சி அரசாங்கத்தின் பலயீனமே எதிர்கட்சிக்கு சாதகமாக அமைந்தது எனலாம்.
ஐனாதிபதியின் அதிகாரத்தை பிரதமரும் பிரதமரின் அதிகாரத்தை ஜனாதிபதியும் உபயோகிக்க முயன்றதன் விளைவுதான் நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெற்ற இனக் களவரங்களை பாதுகாப்பு பிரிவினரே ஏவிவிட்டு வேடிக்கை பார்த்த நிகழ்வுகள் சர்வதேச சமூகத்தையும்,இந்நாட்டு மக்களையும் இவ்வரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
ஒரு பன்முகைத்துவ கலாச்சார விழுமியங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற எமது நாட்டில் அனைத்தின மக்களும் இன,மத,மொழிக்கப்பால் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற மனோநிலையில் தங்களுடைய மதங்களை பின்பற்றி நடப்பதற்கும்,தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வைப்பதற்கும்,தங்களுடைய வியாபரங்களை தங்கு தடையின்றி செய்வதற்கும்,எமது எதிர்கால சந்ததியின் நலன் கருதியும் புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேற்பாளர் முன்னால் ஜனாதிபதி ரனசிங்க பிரமதாசாவின் புதல்வர் சஜித் பிரமதாசாவையே மக்கள் தேர்வு செய்ய வேண்டியதே காலத்தின் தேவையாகும்...!!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -