மூதூரில் மாமாவை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் விளக்கமறியலில்


எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மாமாவை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.
அரபா நகர்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:
சந்தேக நபர் தனது மனைவியின் தந்தையுடன் அதாவது மாமாவுடன் ஏற்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் கத்தியால் வீதியில் வைத்து குத்தியதில் 70 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரின் உயிரிழந்தவரின் மருமனை கைது செய்து மூதூர் பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -