இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் “நான் நேர்மையானவன்” என்ற சின்னத்தை பெற்றுக்கொண்ட சிரேஷ்ட ஊடகவியலளருமான மீரா எஸ். இஸ்ஸடீன்


பைஷல் இஸ்மாயில் -ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலளருமான மீரா எஸ். இஸ்ஸடீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் “நான் நேர்மையானவன்” என்ற சின்னத்தை பெற்றுக்கொண்டார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் "இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.
குறித்த இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றபோது இச்சின்னத்தைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய நிகழ்வின்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) சட்டத்தரணி எஸ்.எம்.சப்ரியினால் “நான் நேர்மையானவன்” என மீரா எஸ். இஸ்ஸடீன் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான சின்னத்தையும் அனிவித்து வைத்தார்.

இந்நிகழ்வில், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -