மட்டக்களப்பு மாவட்டம், ரிதிதென்னை சாலையின் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி விபத்துக்குள்ளாகிய சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
ரிதிதென்னை பகுதியிலிருந்து வடமுனை,ஊத்துச்சேனை நோக்கிச் சென்ற பஸ் வண்டி வீதியில் காணப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட பஸ் வண்டியில் பயணித்த ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.