கொத்மலையில் இளைஞன் ஒருவர் ஆற்றுப்பகுதியில் தவறி விழுந்து உயிரிழப்பு.



க.கிஷாந்தன்-
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் 10.09.2019 அன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தவறி விழுந்த இளைஞனை உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவைச் சேர்ந்த ராஜேந்திரன் நவீந்திரன் (வயது – 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -