மொனராகலை மாவட்டம் வெள்ளவாய பிரதேச செயலாகப் பிரிவிற்குட்பட்ட பலகருவே கிராமத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதி மக்களின் சுகாதார நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று பலகருவே புராண ராஜமஹா விகாரையில் அந்த விகாரையின் விகாராதிபதி பலகருவே சிறிசுமன தேரரின் தலைமையில் இடம்பெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பைசல் காசிம் இவ்வாறு கூறினார்.
இந்தக் கிராமத்தில் 2500 குடும்பங்களை சேர்ந்த 7500 பேர் வசித்து வருகின்றனர்.இந்த மக்கள் வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 20 முதல் 40 கிலோ மீற்றர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அந்த மக்களின் சிரமத்தைப் போக்கி அணைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அங்கு வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -