மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உயிரிழந்த மாணவிசெல்வி.நடேஸ்வரராஜன் அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.
காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை ) மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
அதனையடுத்து அன்னாரின் சடலம் காரைதீவு மத்திய வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டுஇ காரைதீவு இந்து மயானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது மாணவர்கள் பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சனிக்கிழமை பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி அக்ஸயா திடிரென எரிந்த நிலையில் சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.