ஆட்பதிவு தினைக்களத்தின் தென் மாகாணத்திற்கான காரியாலயம் காலியில் (06) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து இக்காரியாலயத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு காணி அமைச்சர் கயன்த கருணாதிலக, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஏ.அஸ்பர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்காரியாலயத்தினுடாக பொதுமக்கள் தங்களது தேசிய அடையாள அட்டையினை ஒருநாளில் பெறக்கூடிய உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இச்சேவையினை மக்கள் காலடிக்கு கொண்டு சென்றமைக்கு இபபிராந்திய மக்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.