புதிய ஜனாதிபதி யார் என்ற அங்கலாய்ப்பு இன்று எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.அனுரகுமார திசாநாயக்க வருவாரா?,கோத்தபாய ராஜபக்ச வருவாரா?அல்லது ரணில் விக்கிரமசிங்க வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் உள்ளது.
எங்களை பொறுத்தவரையில் நாங்கள் ரணில் விக்கிரசிங்க அரசாங்த்தில் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருக்கிறோம.; ஏனைய கட்சிகள் இரண்டும் வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டன.ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை தெரிவு செய்யாதற்கு என்ன காரணம் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஒரு பக்கம் நான் வேட்பாளர் என்று சொல்லி சஜித்பிரேமாதாஸ அவர்கள் கூட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்.இன்னொரு பக்கம் நான் ஜனாதிபதியாக கேட்கப்போகிறேன.
என்று திரு ரணில்விக்கிரசிங்க அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.ஆகவே இருவரில் ஒருவர் தான் வர முடியும். எங்களுடைய எதிர்ப்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட கூடாது.ஆகவே அதன் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கமைய விட்டுக்கொடுப்புடன் சஜித் பிரேமதாஸ அவர்களை முன்மொழிய வேண்டும். என விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஸணன் தெரிவித்தார்.
விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தீ விபத்து மற்றும் மண்சரிவில் காரணமாக லோகி மற்றும் சந்திரகாமம் தோட்டங்களில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் மற்றும் மெட்ரஸ் ஆகிய வழங்கும் நிகழ்வு இன்று (08) அமைச்சர் வி.ராதாகிருஸணன் தலைமையில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் நடைபெற்றது. அதில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு இதன் போது வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேஸ் சிலிண்டர்,கேஸ் அடுப்பு (எரிவாயு கொள்கலன்,எரிவாயு அடுப்பு,) சமையலறை உபகரணங்கள் மெட்ரஸ் போன்ற பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு தலா ஒரு குடும்பத்திற்கு 25000 வீதம் 625000 ரூபாவினை செலவு செய்துள்ளது.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் கல்வி ராஜங்க அமைச்சராக இருந்து போது பல பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கிறேன் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு மாத்திரம் 1200 லட்சம் ரூபா மூன்று மாடி கட்டடத்தினையும் கட்டுவதற்கும் பாடசாலையின் கேட்போர் கூடம் அமைப்பதற்கும் கொடுத்திருக்கிறேன்.அதனை நாங்கள் நாளை (09) திகதி திறந்து வைக்கவுள்ளோம். சிலர் கேட்கலாம் ஏன் அவ்வளவு நிதியினை ஹைலன் மத்திய கல்லூரிக்கு வழங்க வேண்டும்.
என்று இன்று மலையகத்தில் பல பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் வருடம் தோறும் நூறு மாணவர்களை பல்கலைகழகம் அனுப்புவது அந்த பாடசாலை தான் ஏனைய பாடசாலைகள் 10,அல்லது 15 மாணவர்களையே பல்கலைகழகம் அனுப்புகின்றனர். ஆகவே தான் நான் அந்த பாடசாலைக்கு கூடுதலான நிதியினை ஒதுக்கியுள்ளேன்.
அது மாத்தரமன்று டிக்கோயா நுன்கலை கல்லூரி உருவாக்குவதற்கு கூட பல கோடிக்கணக்கான ரூபா நிதியினை பெற்றுக்கொடுத்துள்ளேன் சிலர் விமர்சனம் செய்யலாம். நாங்கள் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் தோட்டங்களில் வீதி குடிநீர் மின்சாரம் என பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக கடந்த காலங்களில் மாத்திரம் 622 கோடி ரூபா நிதியினை ஒதுக்கி வேலை செய்திருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள்,சிவஞானம் பத்மநாதன் கிராமசேவகர் பெருமாள் உட்பட கட்சியின் முக்கயஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்.
விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தீ விபத்து மற்றும் மண்சரிவில் காரணமாக லோகி மற்றும் சந்திரகாமம் தோட்டங்களில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் மற்றும் மெட்ரஸ் ஆகிய வழங்கும் நிகழ்வு இன்று (08) அமைச்சர் வி.ராதாகிருஸணன் தலைமையில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் நடைபெற்றது. அதில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் பிரதேசசபை உறுப்பினர்கள்,உட்பட கட்சியின் முக்கயஸ்த்தர்கள் உபகரணங்களை வழங்கி வைப்பதனை உரையாற்றுவதனையும் படங்களில் காணலாம்