எம்.என்.எம்.அப்ராஸ்-
வித்யாசாகர் கலை மன்றம்,மற்றும் தமிழா ஊடக வலையமைப்பு ஆகியன இணைத்து சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஆதரவுடன் W zero செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி 1 உள்ளடக்கிய செயல் நூல்களை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரில் நேற்று (07.09.2019) நடைபெற்றது.
இவ்விழாவை தமிழா ஊடக வலையமைப்பு பணிப்பளார் எஸ்.முஹம்மது ஜெலீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இவ்விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும், கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களும், சிறப்புஅதிதியாக சம்மாந்துறைபிரதேச செயலாளர் , எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,பொறியியளார் எம்.எஸ்.எம்.நவாஸ் ,அவர்களும் அதிதிகளாக நூலாசிரியர் எம்.ஐ. அகமட் லெவ்வை ,அல்ஹாஜ்.மு.ஆ.முஸ்தபா ,சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் , எம்.ஏ.சபூர்த்தம்பி அவர்களும்
தமிழா ஊடக வலையமைப்பு ஆலோசகர்
எம்.ஐ. அச்சி முஹம்மட் , தமிழா ஊடக வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர்திருமதி. பாயிஸா நௌபல்,தமிழா ஊடக வலையமைப்பின் பிராந்திய முகாமையாளர் ஜே. எம். பாஸித் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.