விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இளம் விளையாட்டு வீரர் எம்.எம்.அஹமட் அனீகுக்கு தனது பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.....
சிறு வயதிலே பெற்றோரையும் இழந்தது மட்டுமன்றி புற்று நோயால் தனது ஒரு காலையும் இழந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு 2019 தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டம்,200 மீற்றர் ஓட்டம்,நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து எம்.எம்.அஹமட் அனீக் தேசிய,சர்வதேச ரீதியில் இன்னும் பல சாதனைகளை நிலை நாட்ட வேண்டுமெனவும் அவரின் ஏதிர்கால வாழ்க்கைக்கு தன்னாள் முடியுமான உதவிகளை வழங்குவதாகவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
