வாகனச் சாரதிகளுக்கு வீதி அதிகார சபையின் அறிவுறுத்தல்.

ஐ. ஏ. காதிர் கான்-

ற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, கட்டுநாயக்க மற்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் வேகத்தை 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்திப் பயணிக்குமாறு, சாரதிகளுக்கு வீதி அதிகார சபை இன்று (24) அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் வாகனங்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்டுப் பயணிக்குமாறும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், குறித்த அறிவுறுத்தல்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -