பால்நிலை சமத்துவம் தொடர்பில் திருகோணமலையில் செயலமர்வொன்று இன்று (07)ஆரம்பிக்கப்பட்டது.

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்ட சமூக அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் அகம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
சுமார் 40க்கும் மேற்பட்ட சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது சமூகத்தில் காணப்படும் பால்நிலை வேறுபாடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள், மற்றும் தராதரங்கள் பற்றி விசேட வளவாளர்களாக  தெற்காசிய சமூக நீதிக்கான சட்டத்தரணிகளின் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தினார். 
கிராம மட்டங்களில் பெண்கள் மத்தியில் ஏற்படும் பால்நிலை சம்பந்தமான பிரச்சனைகளை கையாள்வதில் ஒரு முகத்தன்மையினை உறுதிப்படுத்தும் முகமாகவே இச்செயலமர்வு இடம்பெற்றது. 
இக்கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகளின்  தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், அகம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -