சுய தணிக்கையின் அரசியல் " ஆய்வு நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா"

அப்துல்சலாம் யாசீம்-

சு
ய தணிக்கையின் அரசியல்  ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (03) திருகோணமலையில் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ. அச்சுதன் தலைமையில் நடைபெற்றது.

அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் " சுயதணிக்கையின் அரசியல் " ஆய்வு நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் பிரதம விருந்தினராக தனியார் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் எஸ். எஸ். குகநாதன் கலந்து சிறப்பித்தார்.

நூல் வெளியீட்டின் ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையை திருகோணமலை நகரசபை உறுப்பினர் க . ஜெயபிரகாஷ் வழங்க, நூல் அறிமுகத்தினை கவிஞர் தி. பவித்திரன் வழங்கினார்.

நூல் பற்றிய கருத்துரையினை நீங்களும் எமுதலாம் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் வழங்கியதுடன் சமகால நிலைமைகள் தொடர்பில் கூர்மை செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியர் அ . நிக்ஸன் உரையாற்றினார்.

இவ் விழாவில் எமுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -