மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒருநாள் கற்பித்தல் பயிற்சிநெறி இன்று (29) ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சிநெறியில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் ரீ.ரவி, ஜெயவதனன் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






