வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு


க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து 17.08.2019 அன்று காலை 10 மணியளவில் உடல் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று அட்டன் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச்செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் அட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -