அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் சடலமாக மீட்கபட்ட
ஆண் சிசுவின்தயார் அட்டன் பொலிஸாரினால் 20.08.2019.செவ்வாய்கிழமை கைது
செய்யபட்டுள்ளார் .
கடந்த சனிக்கிழமை காலை ஆண் சிசுவின் சடலம் ஒன்று காசல் ரீ நீர்தேக்கதில்
மிதந்து கொண்டிருப்பதை மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களினால் இனம் கண்டு
அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டமைக்கு அமைய குறித்த சிசுவின் சடலம்
மீட்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு
இருந்தது.
இதேவேலை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த அட்டன் பொலிஸார்
இன்றய தினம் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து குறித்த சிசுவின் தயார்
கைது செய்யப்ட்டுள்ளார்
சம்பத்தில் கைது செய்யபட்ட சிசுவின் தயார் அட்டன் நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணை தொடர்கிறது