பேலியகொ​டையில் பாரிய தீ ; 14 வீடுகள் முற்றாக சேதம்

ஐ. ஏ. காதிர் கான்- 

பேலியகொடை - போரணுகொட்டுவ பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக, பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்து, (19) இரவு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தீயணைப்புப் படையினரால் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும்,
இந்தத் தீ விபத்தின் காரணமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையென்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இத்தீ அனர்த்தம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -