14 வயது ஜா - எல சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 22 வயது இளைஞர் கைது


மினுவாங்கொடை நிருபர்-
ஜா - எலயைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து, அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்தி வந்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் இவ்விளைஞர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவ்விளைஞரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நிக்கவெரட்டிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர், ஜா - எல பிரதேசத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்தபோது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுமியை ஏமாற்றி நிக்கவெரட்டியவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ள சந்தேக நபர், அங்கு அச்சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, குறித்த சிறுமி தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிக்கவெரட்டிய பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -