பதவி உயர்வுபெற்றுச் செல்லும் மகிந்த முதலிகேவுக்கு கௌரவம்!
அம்பாறை மாவட்ட 24 ஆவது படைப்பிரிவின் தளபதி மகிந்த முதலிகே அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்வதை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் உயர்மட்ட குழுவினர் மகிந்த முதலிகே அவர்களைச் சந்தித்து அவர் குறுகிய காலத்துள் அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தி செயற்பட்டமையை பாராட்டி கௌரவித்து ஞாபக சின்னம் ஒன்றை வழங்கி வைத்தனர். இதன்போது சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன்,சம்மாந்துறை மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.ஹனீஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...