குடிநீர் தொட்டிக்குள் அடைகாத்திருந்த கருநாக பாம்பு..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதுவும் கொடிய விஷத்தன்மை கொண்ட கருநாகம் என்றால் சொல்லவும் வேண்டுமா?. கிராம மக்களை கதிகலங்க செய்த சம்பவம் மணப்பாறை அருகே நேற்று அரங்கேறியது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் நீரேற்று உந்து நிலையம் உள்ளது. இதன் பின்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதன்அருகே சிறிய தொட்டி ஒன்றும் உள்ளது. அந்த தொட்டியில் தற்போது தண்ணீர் இல்லை. அதில் கருநாகம் ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது.

குடிநீர் தொட்டிக்குள் பாம்பு படுத்து இருப்பதை அறிந்த அந்த பகுதி மக்கள் அதை பிடிக்க முயற்சித்தபோது அது கடும் ஆக்ரோஷம் அடைந்தது. அந்த கருநாகம் தான் இட்ட முட்டைகளை அடைகாத்து கொண்டு இருந்தது தான் இதற்கு காரணம். இதனால், அதன் அருகே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.

இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு அடைகாத்து வந்த முட்டையையும் எடுத்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்பை வனத்துறையினர் பெற்று காட்டில் கொண்டுபோய் விட்டனர். அதன் முட்டைகளை காட்டில் உள்ள புதரில் பத்திரமாக வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிறு நேரம் பரபரப்பு நிலவியது.மாம

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -