இடமாற்றம் பெற்று சென்ற அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோரது சேவையை பாராட்டி ஆசி வழங்குவதாக கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டார்.
இடமாற்றம் பெற்று சென்ற அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோரது இடமாற்றம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில்
அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியாக இருந்து செயற்பட்ட மஹிந்த முதலிகே எமது மாவட்டத்தின் பாதுகாப்பு விடயத்தில் மிக அக்கறையுடன் செயற்பட்டவர். மதஇஇனஇமொழி வேறுபாடுகளை கடந்து இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முன்னின்றவர். அம்பாறை மாவட்ட மூவின மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது சேவை எம் மக்களுக்கு அளப்பரியது .இனிவரும் காலங்களிலும் அவர் எமது நாட்டிற்காக சிறந்த சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அதே போன்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி இன மொழி பேதமின்றி பாகுபாடுகளைக் கடந்து நெறி பிரளாது இந்த பிரதேசத்து மக்கள் சட்டத்தின்படி வாழ நெறிப்படுத்தியவர்.அவரது சேவை இச் எமது நாட்டிற்கு தேவை. சமூகத்தின் பிணக்குகளை களைய எமது பிரதேசத்தில் கடினமாக உழைத்தவர். இவர்கள் இருவரும் மென்மேலும் பாரிய சேவைகளை ஆற்ற புத்தபகவான் ஆசிவழங்குவார் என தெரிவித்தார்.