கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளரை கௌரவித்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்



எம்.ரீ. ஹைதர் அலி-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெத்தினம் ஓய்வு பெறுவதையொட்டி அவரின் சேவையை பாராட்டி கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருள் வழங்கியும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன மத பேதத்திற்கப்பால் மிக நேர்மையாகவும் இலஞ்சம் ஊழல்களுக்கப்பால் சேவையாற்றிய மாகாண பணிப்பாளரை பாரட்டுவதில் பெருமை அடைகின்றேன்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்லாது முழு கிழக்கு மாகாணத்திற்கும் தனது சேவைக்காலத்திற்குள் தனது பொறுப்புக்களை உணர்ந்து நல்லமுறையில் சேவையாற்றிய பொறியியலளரை மட்டக்களப்பு மக்களின் சார்பாக நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
10 இலட்சம் பெறுமதியான சிறிய வீதி அபிவிருத்திகளை செய்துவிட்டு பல பாராட்டுக்களையும் மாலை அணிவித்து கௌரவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளை பாராட்டுகின்ற நாம் பல கோடிக்கணக்கான அபிவிருத்திகளை எந்த ஆரவாரமும் இல்லாமல் தேவை அறிந்து கட்சிதமாக செய்து முடித்த இவ்வாறான படித்த பொறியியலாளர்களை கௌரவிக்க வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -