ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 குடும்பங்கள் இடம்பெயர்வு


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த குடும்பங்கள் பாதுகாப்பாக அப்பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் 13 வீடுகளில் புகுந்துள்ளதனால் இந்த வீடுகளில் வாழ்ந்த 66 பேர் இவ்வனத்தத்தினால்; இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 35 ஆண்கள் 31 பெண்கள் 12 பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று வயது நிரம்பிய மூன்று பிள்ளைகள் இருப்பதாகும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் தெரிவித்தார்.
குறித்த குடியிருப்புகளுக்கு மேலாக குளம் ஒன்று அமைந்திருப்பதால் இந்த குளத்தில் நீர் உயர்ந்துள்ளதன் காரணமாகவும் குறித்த குளம் உடைபெடுத்தால்; பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பதனை கருத்தில் கொண்டு இக்குடும்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு பிரதேச இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கிராம சேவகர் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -