ரஷ்யாவில் நடைபெற்ற அனர்த்தங்களை எதிர்கொள்வது சம்பந்தமான பயிற்சி ;


 இலங்கையில் இருந்து ரஞ்சித் மத்தும பண்டார கலந்து சிறப்பித்தார்
கஹட்டோவிட்ட ரிஹ்மி-
12
ஆவது ஒருங்கிணைந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கண்காட்சி சென்ற 5 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்கள் மற்றும் விடயம் சம்பந்தமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிராந்திய மற்றும் பூகோள ரீதியில் ஏற்படும் அனர்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.நெருப்பு அணைத்தல் மற்றும் உயிரை காப்பாற்றுதலுக்கு நவீன தொழில்நுட்பத்தை பாவித்தல் பற்றி பல்வேறு நாடுகளுக்கும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -