கினிகத்தேன பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து .. இளைஞன் பலி...

ட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தன பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்ததாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து 15.06.2019 சனிக்கிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றுள்து
அம்பகமுவ உடபுலத்கம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்  கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து
சபைக்கு சொந்தமான பேருந்தும் கினிகத்தேன பகுதியில் இருந்து ரஞ்சிராவ
பகுதிக்கு சென்ற ஊந்துருளியும் கினிகத்தேன பதுபொலபகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுுகாயமடைந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேலையிலே குறித்த இளைஞன் உயிர் இழந்தள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக கினிகத்தேன
பொலிஸார் தெரிவித்தனர் உயிர் இழந்த இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்டவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -