யாழில் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் நோன்புப் பெருநாள் விசேட உரை (பிரசங்கம்) இடம்பெற்றது.
இன்றைய பெருநாள் தொழுகையில் யாழ் வாழ் முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நகர்ப்புற முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் வட்டாரம் சின்ன மொஹிதீன் பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அபூபக்கர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் :- என்.எம். அப்துல்லாஹ் - யாழ்ப்பாணத்திலிருந்து ....




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -