இன மத பேதங்கள் அற்றவர்களாக நாம் அனைவரும் ஓர்நாட்டின் தாய் பிள்ளைகளே என்ற உயர் நிலையில் இருக்க வேண்டும்-


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்
புனித நோன்புப் பெருநாளைக் (ஈதூல் பித்ர்) கொண்டாடிக் கொண்டிருக்கும் என் இனிய உறவுகள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்தினை அன்பின் மலர்களாகத் தூவி பெருமிதம் அடைந்தவனாக


தாய்த்திருநாட்டில் எம் சகோதரர்களிடையே ஒற்றுமை மேலோங்கிக் காணப்படும் இப்புனித நாளில் இந்நிலை என்றும் தொடரவும் , இன மத எதுவித பேதங்களும் அற்றவர்ளாக நாம் அனைவரும் ஓர்நாட்டின் தாய் பிள்ளைகளே என்ற உயர் நிலையோடு உன்னதமாக வாழ்ந்திடவும்


நாட்டில் எம் சகோதர உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு நீங்கவும் நிம்மதியான அழகான சூழல் உருவாகி நிம்மதிப் பெருமூச்சு விடவும் இறைவனிடம் கண்ணீர்மல்க இருகரமேந்திப் பிராத்தித்து இப்புனித நன்நாளை வெற்றி
கொள்வோமாக என தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -