கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி-மற்றுமொருவர் காயம்

பாறுக் ஷிஹான்-
குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை(14) மாலை 05:45 மணியளவில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் காயங்களுக்கு உள்ளான மற்ற நபர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
குடும்ப தகராறு காரணமாக குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர் இழந்த நபர் வடிவேல் வீதி காரைதீவு 12ல் வசிக்கும் ஒரு பெண்பிள்ளையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27வயது) என்பவராவார்.
உயிர் இழந்த நபரின் சடலம் காரைதீவு வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் .

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -