ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டபகுதியில் உள்ள
தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08பெண் தொழிலாளர்கள்
குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலையில்
அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவம் 08.06.2019. சனிகிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
வனராஜா தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் பெண் தொழிலாளர்கள் கொழுந்து
பறித்து கொண்டிருந்த வேலையில் தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி
கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான
தொழிலாளர்கள் தெரிவித்னர்
காயங்களுக்கு உள்ளான 08பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை
பெற்றுவருவதாக டிக்கோய கிழங்கன் ஆதாரவைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர்
தெரிவித்தார்