சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் மக்கள் பயிற்றுனர்கள் மூலம் கிராம மட்ட நிருவாகிகளை அறிவூட்டும் செயலமர்வு இன்று (21) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சாய்ந்தமருது சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன், திட்ட உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாறக், வலய உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட கிராம மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சமுதாய அடிப்படை அமைப்பினை எவ்வாறு நிர்வகித்தல், கூட்டறிக்கை, கணக்கறிக்கை எழுதுதல் உள்ளிட்ட அமைப்பு சம்பந்தபட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் ஏ.எம்.பசீலினால் விளக்களிக்கப்பட்டது.