சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் கிராமமட்ட விளையாட்டு அபிவிருத்தியை இலக்காக வைத்து சமுர்த்திமுகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில்பிரதேச செயலகங்கள் தோறும் பிரதேச விளையாட்டுச் சங்கங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தினைஆரம்பித்துள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச விளையாட்டுச் சங்க அங்குரார்ப்பன கூட்டமும் நிர்வாகத் தெரிவும்திங்கட்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா,சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ்,சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக் உள்ளிட்ட சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுச் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. இதில்தலைவராக சமுர்த்தி உதவி முகாமையாளரும், நுஜா ஊடக அமைப்பின் தவிசாளருமான றியாத் ஏ. மஜீத்தெரிவானார்.
செயலாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நளீம், பொருளாளராக சமுர்த்தி வங்கிமுகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், பிரதித் தலைவராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர்,உதவிச் செயலாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜாபீர் ஆகியோர் தெரிவாகினர்.
பிரதேச விளையாட்டுச் சங்கத்தின் ஆலோசகர்களாக பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் மற்றும் சமுர்த்திதலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் செயற்படுவர்.