கிண்ணியா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நாளை மறுதினம் (02) சனிக் கிழமை மாலை 2.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அனீபா தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் கௌரவ அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப் , கல்வி உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -