மட்டக்களப்பு மாநகரசபையில் அதிரடி!


மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும், எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையில், குறித்த பிரேரணையினை தான் கொண்டுவந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கூறியுள்ளார்.
இதற்கு தேவையான நிதியினை மாநகரசபை ஒதுக்கீடுசெய்வதுடன், புலம்பெயர் உறவுகளிடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -