இலங்கைப் நிதியியல் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைளினால் தங்களுடைய நிதிக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட மீன் ஏற்றுமதி (FSP) மற்றும் தைத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான (GSP+) வரிச் சலுகைகளை இடை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், பின்வரும் நீண்டகால கடன் தொகைகளும் நிறுத்தப் பட்டுள்ளன.
IMF 185 மில்லியன் US $
USA 490 மில்லியன் US $ Japan 140 மில்லியன் US $
மேலும் 2018 டிசம்பர் மாதத்திற்குள் திரும்பச் செலுத்தும் கடனாக 120 மில்லியன் US $ செலுத்தப் படவுள்ளது. அது தவறும் பட்சத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அரச தொழில் புரிவோருக்கான மாதாந்த சம்பளம் கூட இடை நிறுத்தப் படும் சாத்தியக் கூறுகளும் காணப் படுகின்றன.
சென்ற அரசாங்கத்தை நம்பி முதலீடு செய்த சில BOI வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிதியீட்டல் நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ளும் சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன.
எனவேதான் இவை அத்தனைக்கும் காரணமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கெளரவ மைத்திரி மற்றும் பொது பிறமுன பிரதமர்(2) கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
தனிப்பட்ட அரசியல் குரோதங்களை வைத்துக் கொண்டு உங்களுக்கு வாக்குப் பிச்சை வழக்குகின்ற மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தப் போகின்றீர்கள்.
இத்தனை அநியாங்களை கட்டவிழ்த்து விட்டு தேர்தல் களம் ஒன்று சந்தித்தால் நிச்சயமாக மைத்திரி-மஹிந்த படுதோல்வி அடைவது நிச்சயம். இவர்களால் இனி நன்மதிப்புக் கூட கட்டியெழுப்ப முடியாது.
கெளரவ ஜனாதிபதி அவர்களே!
கெளரவ பிரதமர்(2) அவர்களே!
இந்த அரசியல் கொந்தளிப்பை இல்லாமல் செய்ய ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுங்கள்.
இல்லையேல் பாராளமன்ற பெரும்பான்மைக்கு விட்டுக் கொடுங்கள்.
அது பேயாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.
நாளை...நமதே.
இந்த நாடும்..... நமதே.
அரசியல் அவதானிப்புக்காக....
கல்முனையில் இருந்து...
ஜுனைடீன் மான்குட்டி,
கெளரவ ஜனாதிபதி அவர்களே!
கெளரவ பிரதமர்(2) அவர்களே!
இந்த அரசியல் கொந்தளிப்பை இல்லாமல் செய்ய ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுங்கள்.
இல்லையேல் பாராளமன்ற பெரும்பான்மைக்கு விட்டுக் கொடுங்கள்.
அது பேயாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.
நாளை...நமதே.
இந்த நாடும்..... நமதே.
அரசியல் அவதானிப்புக்காக....
கல்முனையில் இருந்து...
ஜுனைடீன் மான்குட்டி,