அரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி


நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்றால், வரவு செலவுத் திட்டமொன்றையும் முன்னெடுக்க முடியாமல் போகும். நாட்டில் வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்காமல் செலவு செய்வது எப்படி ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலைமையினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் பிரச்சினைக்குரியதாக மாறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -