இந்திய ஊடகங்களுக்கு எங்கள் கதாநாயகன் மஹிந்தவை பலியிட முடியாது


ரலாற்றை கடுகளவும் அறியாது எங்கள் தேசத்தின் தலைவர்களின் பெயரையே சரியாக உச்சரிக்க தெரியாத தமிழகத்தின் சில ஊடகங்களும் சில அரசியல் அனாதைகளும் இனிமேலும் எங்கள் நாட்டின் உள் வீட்டு பிரச்சினைகளை வேறுதிசையில் ஊதி மக்களை மடையர்களாக்க முனைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ச எனும் அந்த தலைவனுக்கும் எம் நாட்டின் மக்களுக்கும் பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இந்த நாட்டில் சமாதானத்தை விதைத்த பெருமை அவரையே சாரும். விடுதலை புலிகள் எனும் இரத்த காட்டேரிகளை அடியோடு கருவறுத்த அந்த தலைவனை நீங்கள் எவ்வளவுதான் தரக்குறைவாக பேசினாலும் அவர் இலங்கை மக்களிடம் வரலாற்று கதாநாயகனாகவே பதிவாகியுள்ளார்.
அபிவிருத்தி செய்வதில் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்திய அந்த தலைவன் சில காட்டுமிராண்டிகளின் சதியால் வீழ்ந்தாலும் சாகாமல் பீனிக்ஸ் பறவையாக மீண்டுவந்தது இந்த யுகத்தின் அரசியல் பாடத்தின் முக்கிய அத்தியாயம் எனலாம். சதி மூலமே பல அரசியல் மாற்றங்கள் நடந்ததை காலம் கனிந்து உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

சர்வதேசத்திடமும், உலகின் சமாதானத்தை விரும்பும் மக்களிடமும் பொய்யான செய்திகளை கொண்டு சேர்த்து மக்களை பிழையான திசைக்கு வழிநடத்தும் பாரிய தவறை இந்திய சில ஊடகங்கள் பகிரங்கமாக செய்து வருவது கண்டிக்க வேண்டிய செயல்.
இரத்தம் குடிக்கும் காட்டேரிகளுடன் பல தரப்பு பேச்சுவார்த்தை செய்தும் பயனளிக்க வில்லை என்பதை அந்த ஊடகங்கள் வெளிக்கொணர மறுப்பது ஏன்? தமிழ் ஈழம் கோரிய விடுதலை புலிகள் அதே ஈழப்பிரதேசத்தில் வசித்த முஸ்லிங்களை கொன்றது ஏன்? இறைவனை தொழுத பச்சிளம் பாலகர்கள் மடிந்த தடயங்கள் இன்றும் இலங்கையில் மட்டுமில்லை இதயங்களிலும் அப்படியே இருக்கிறது. அவசரமாக முஸ்லிங்களை வெளியேற்றிய அவர்கள் தானே பள்ளிக்கூடம் செல்லவேண்டிய மாணவர்களை (பாலகர்களை) ஆயுதத்துடன் போருக்கு அனுப்பினார்கள். யுத்த விதிமுறைகள் பேசும் தரங்கெட்ட ஊடகங்களுக்கு இவைகள் ஏன் தெரியாமல் போனது??

"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்" என்பது போல அவர்கள் செய்த அட்டூழியங்கள் என்ன என்பதை உங்கள் நன்மதிப்பை நன்றாக பெற்ற முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிடம் கேளுங்கள் நன்றாக உங்களுக்கு விளங்கும் மொழியில் தெளிவாக தருவார். மஹிந்த ராஜபக்ச எனும் மக்களின் தலைவனை பிழையாக சித்தரிக்க வேண்டிய உங்களின் தேவைகளுக்காக இலங்கையை பலியாக்க முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
எங்களின் நாட்டின் அரசியல் கட்சி தலைவர்களின் பெயரையே சரியாக தெரியாத உங்களுக்கு, அரசியல் கட்சிகளின் பெயர்களே நன்றாக வாசிக்க முடியாத உங்களுக்கு எங்கள் நாட்டின் வரலாறுகள் மட்டும் நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கை மக்கள் நிம்மதியாக இன்று வாழ வழிசமைத்து கொடுத்து தமிழ் ஈழ விடுதலை புலிகள் எனும் காட்டேரிகளின் பிடியிலிருந்த பிரதேசங்களை "வடக்கின் வசந்தம்","கிழக்கின் உதயம்" திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை அள்ளி வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை உங்களின் அரசியல் அஜந்தாக்களுக்கு பலியாக்க உண்மையாக நாட்டை நேசிக்கும் எந்த இலங்கையனும் இடம்தரமாட்டான் என்பதை பெருமையோடு குறிவைக்க விரும்புகிறேன்.
அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர்
தவிசாளர்,
அல் - மீஸான் பௌண்டஷன்-ஸ்ரீ இலங்கை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -